‘ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்’ விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கடத்தல்காரர்கள்!

 

‘ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்’ விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கடத்தல்காரர்கள்!

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்திருக்கிறது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம் போல சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் என்ற நபர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த 152 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சுரேஷ் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

‘ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்’ விமான நிலையத்தில் வசமாக சிக்கிய கடத்தல்காரர்கள்!

இதைத் தொடர்ந்து துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த சாதிக் என்பவரின் பாக்கெட்டில் இருந்த 1128 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்தவராம். அதே விமானத்தில் வந்த ஜியாவுதீன் சாகிப் என்பவரிடம் இருந்தும் 896 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி விமான நிலையத்திற்கு தங்கத்தை கடத்தி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.