’தங்கத்தை அந்த இடத்திலேயே மறைச்சி வைப்பீங்க’ அதிர்ந்த அதிகாரிகள்

 

’தங்கத்தை அந்த இடத்திலேயே மறைச்சி வைப்பீங்க’ அதிர்ந்த அதிகாரிகள்

கொரோனா முடக்க காலத்திலேயும் தங்கம் கடத்தல் மட்டும் குறையவே இல்லை. வாரம் ஒரு செய்தியாவது தங்கம் கடத்தல் தொடர்பாக வந்துகொண்டே இருக்கிறது.

சென்னை விமான நிலையத்தில், துபாயில் டூ சென்னை வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. பிளை துபாய் விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த சபிவுல்லா அப்துல் வாகித், சகாப்தீன் சாபர் சதிக் ஆகியோர் சந்தேகப்படும்படியாக நடந்துகொண்டார்கள்.

’தங்கத்தை அந்த இடத்திலேயே மறைச்சி வைப்பீங்க’ அதிர்ந்த அதிகாரிகள்

இவர்களை சோதனை செய்த அதிகாரிகள், தலா ஒரு தங்கப் பசைப் பொட்டலங்களை ஆசனவாயில் மறைத்து வைத்துக் கடத்தி வரப்பட்டதைக் கண்டு அதிர்ந்தார்கள். அந்தத் தங்கப் பசையிலிருந்து 182 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 9.4 லட்சம்.

இன்டிகோ விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த ராவுத்தர் என்ற பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவரது கால் சட்டைப் பையில் இருந்து 49 கிராம் தங்கத் துண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லட்சம்.

’தங்கத்தை அந்த இடத்திலேயே மறைச்சி வைப்பீங்க’ அதிர்ந்த அதிகாரிகள்

மேலும், ராவுத்தர் மூன்று பொட்டலம் தங்கப் பசையை தனது ஆசன வாயில் மறைத்து வைத்திருந்தார். அதிலிருந்து 741 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.37.7 இலட்சம். இவர் கைது செய்யப்பட்டார். கைப்பற்றப்பட்ட 972 கிராம் தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.49.6 லட்சமாம்.