’பொம்மை காருக்குள் தங்கத் தகடுகள்’ சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி

 

’பொம்மை காருக்குள் தங்கத் தகடுகள்’ சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி

கொரோனா நோய்த் தொற்றால் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக விமானப் போக்குவரத்து மிக சொற்பமான அளவில்தான் நடக்கிறது. அதுவும் முறைப்படி கொரோனா சோதனைக்கு பயணிகளை உட்படுத்திய பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையிலும் தங்கம் கடத்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த பதினைந்து நாள்களாக பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டிருக்கிறது. அந்த நிலை நேற்றும் தொடர்ந்தது.

’பொம்மை காருக்குள் தங்கத் தகடுகள்’ சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி

சிறப்பு எச்சரிக்கை அடிப்படையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 18.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 388 கிராம் எடை கொண்ட தங்கத்தைக் கைப்பற்றினார்கள்.

பயணிகளுடன் சேர்ந்து அல்லாமல் தனித்து வந்த உடைமைகளுக்கான டெர்மினலில் துபாயிலிருந்து வந்தடைந்த பயணிகளின் தனிப்பட்ட உடைமைகளிலிருந்து இது கைப்பற்றப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த ஆர். சங்கர் என்பவர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ix1644 மூலமாக தனித்து வந்த தமது தனிப்பட்ட வீட்டு உபயோக பொருள்களை எடுத்துச் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார்.

’பொம்மை காருக்குள் தங்கத் தகடுகள்’ சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி

சங்கர் முன்னதாகவே துபாயிலிருந்து வந்து சேர்ந்து விட்டார். பொருள்களைப் பரிசோதித்த போது, பொம்மை கார் ஒன்றும் நான்கு கடிகாரங்களும் ஒரு பெட்டியில் இருந்தன. அவற்றைத் தூக்கியபோது அவை அளவுக்கு அதிகமாக எடை கொண்டதாக இருந்தன.

அந்த பொம்மைக் காரை திறந்து பார்த்த போது, அதற்குள்ளே ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது தெரியவந்தது. அதைப் பிரித்துப் பார்த்த போது அதில் பதிமூன்று தங்கத் தகடுகள் E வடிவத்திலும் 2 தங்கத் தகடுகள் I வடிவத்திலும் இருந்தன. கடிகாரங்களின் பின்பக்க மூடியை திறந்தபோது, தங்கத்தால் செய்யப்பட்ட மோதிரம் ஒவ்வொரு கடிகாரத்திலும் இருந்தது தெரியவந்தது.

’பொம்மை காருக்குள் தங்கத் தகடுகள்’ சென்னை விமானநிலையத்தில் அதிர்ச்சி

மொத்தம் 388 கிராம் 24 கேரட் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 18.5 லட்சம் ரூபாய். இவை சுங்க சட்டம் 1962 ன் படி பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்த மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.