ரூ.39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

 

ரூ.39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.39 ஆயிரத்தை எட்டியுள்ளது.

பொது முடக்க நாட்களில் பொருளாதார சரிவு மற்றும் தங்கத்தின் வரத்து குறைவு காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, ரூ.50 ஆயிரம் வரை உயரும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ரூ.39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,884க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.ரூ.136 உயர்ந்து ரூ.39,072க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.70,000க்கும் விற்பனையாகிறது.