தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டுமா?

 

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டுமா?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருகிறது. பொதுமுடக்கத்தின் போது ரூ.43 ஆயிரத்துக்கு மேல் விற்கப்பட்டு வந்த தங்கம் விலை தற்போது ரூ.37 ஆயிரத்தில் நீடித்தாலும், தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்து வருவதால் மீண்டும் உச்சத்தை எட்டுமா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை: ரூ.38 ஆயிரத்தை எட்டுமா?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4,670க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,360க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,900க்கும் விற்பனையாகிறது.