மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் ரூ.37,000ஐ கடந்தது தங்க விலை!

 

மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் ரூ.37,000ஐ கடந்தது தங்க விலை!

கொரோனா நோய்த்தொற்று உலக நாடுகளைப் புரட்டிப் போட்டுள்ளது. அதனுள் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல. மக்களை ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தங்க விலை இதுவரை கண்டிராத விலை உயர்வைச் சந்தித்து வருகிறது.

மக்களுக்கு அதிர்ச்சி செய்தி.. சென்னையில் ரூ.37,000ஐ கடந்தது தங்க விலை!

கொரோனா வைரஸ் அதிகமாக பரவத் தொடங்கிய ஏப்ரல் மாதம் தங்க விலை ரூ.36 ஆயிரத்தைக் கடந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்து தங்க விலை உயர்வைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.4,635க்கு விற்கப்படுகிறது. அதன் படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.37,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.