ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 உயர்வு!

 

ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 உயர்வு!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து ரூ.4,842க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொது முடக்க நாட்களில் பொருளாதார சரிவு மற்றும் தங்கத்தின் வரத்து குறைவு காரணமாக தங்க விலை வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்க விலை, ரூ.50 ஆயிரம் வரை உயரும் என பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்க விலை கணிசமாக குறைந்து தற்போது ரூ.38 ஆயிரத்தில் நீட்டிகிறது.

ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,842க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.ரூ.256 உயர்ந்து ரூ.38,736க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,300க்கும் விற்பனையாகிறது.