தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

 

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது.

பொதுமுடக்கக் காலத்தில் அதிரடியாக ஏற்றத்தைக் கண்ட தங்கம் விலை, சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வைச் சந்தித்தது. அதன் பிறகு, தளர்வுகள் அளிக்கப்பட்டதால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வந்து ரூ.38 ஆயிரத்தில் நீடித்தது. இதையடுத்து, அண்மையில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கம் விலை தொடர் சரிவை கண்டதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தங்கம் விலை இனிமேல் குறைந்து விடும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

தொடர் ஏறுமுகத்தில் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன?

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4,726க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37,808க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.71.50க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.71,500க்கும் விற்பனையாகிறது.