“தங்கம் விலையில் அதிரடி ஏற்றம்” ரூ.39 ஆயிரத்தை நெருங்கியது!

 

“தங்கம் விலையில் அதிரடி ஏற்றம்” ரூ.39 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டு ரூ.29 ஆயிரத்தில் நீடித்து வந்த நிலையில், பொதுமுடக்க காலத்தில் வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தது. சுமார் ரூ.43 ஆயிரத்தை எட்டிய தங்கம் ரூ.50 ஆயிரத்தை எட்டும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு முக்கிய காரணம் பொருளாதார வீழ்ச்சியும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததும் தான். இதை தொடர்ந்து பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், தங்க விலை குறையத் தொடங்கியது.

“தங்கம் விலையில் அதிரடி ஏற்றம்” ரூ.39 ஆயிரத்தை நெருங்கியது!

இந்த நிலையில், இன்று காலை ஏற்றத்தை சந்தித்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,867க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.456 குறைந்து ரூ.38,936க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50க்கும் ஒரு கிலோ தங்கம் ரூ.69,500க்கும் விற்பனையாகிறது.