’26 சவரன் நகை கொள்ளை’.. பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

 

’26 சவரன் நகை கொள்ளை’.. பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

மதுரையில் பூட்டியிருந்த வீட்டில் 26 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் வசித்து வருபவர் முனியம்மாள். இவரது வீட்டில் தங்க நகை இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு முனியம்மாள் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கொள்ளையர்கள், முனியம்மாள் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பீரோவில் வைக்கப்பட்டிருந்த 26 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

’26 சவரன் நகை கொள்ளை’.. பூட்டியிருந்த வீட்டில் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்!

இன்று காலை வீடு திரும்பிய முனியாம்மாள், நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அப்பகுதியில் சிசிடிவி காட்சியில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என சோதனை செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். முனியம்மாள் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.