தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை…

 

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை…

மதுரை

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பெருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை அண்ணாநகர் லேக் ஏரியா பகுதியை சேர்ந்தவர் ஜவஹர் ரவீந்திரன் (55). தனியார் நிறுவன ஊழியர். இவர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் கோவைக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜவகர் உள்ளே சென்றுபார்த்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் கொள்ளை…

அப்போது, அறையில் இருந்த பீரோவை உடைத்து உள்ளே வைத்திருந்த 10 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், பட்டுப் புடவைகள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜவஹர் கே.புதூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.