ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு !

 

ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு !

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் தங்க செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மரக்காணம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் மனைவி ஜெயா உடல்நல குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார்.

ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு !

இந்நிலையில் நள்ளிரவில் ஜெயா சிகிச்சை பெற்று வந்த ஐசியூ அறைக்குள் புகுந்த மர்ம நபர் ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி செயினை பறித்து சென்றுள்ளார்.

ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு !

இதுகுறித்து மணிகண்டன் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்பைடயில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்ற செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர். ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் செயினை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.