பவானி தேவிக்கு தங்கச்சங்கிலி பரிசு : நடிகர் சசிகுமார் அசத்தல்!

 

பவானி தேவிக்கு தங்கச்சங்கிலி பரிசு : நடிகர் சசிகுமார் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோ கடந்த மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள் வென்று அசத்தியது. ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்ச பதக்கம் வென்றிருப்பது இதுதான் முதல்முறை.

பவானி தேவிக்கு தங்கச்சங்கிலி பரிசு : நடிகர் சசிகுமார் அசத்தல்!

கடந்த 2012ஆம் ஆண்டு இந்தியா இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றிருந்த நிலையில் இந்தமுறை 7 பதக்கங்களை வென்றது. தமிழகத்திலிருந்து வாள் வீச்சு போட்டியில் கலந்துகொண்ட சென்ற பவானிதேவி இரண்டாவது சுற்று வரை முன்னேறி தோல்வியை தழுவினார். இருப்பினும், பிரான்சில் நடைபெறும் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார் பவானிதேவி.

பவானி தேவிக்கு தங்கச்சங்கிலி பரிசு : நடிகர் சசிகுமார் அசத்தல்!

இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானிதேவியை நேரில் சந்தித்து பாராட்டியதுடன் தங்கச் செயின் பரிசளித்த நடிகர் சசிகுமார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து இயக்குநர் இரா.சரவணன் தனது பேஸ்புக் பக்கத்தில், “வென்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவோம்; தோற்றால், பார்க்கக்கூட மாட்டோம். எல்லோர் இயல்பும் இதுதான் என்றாலும், நல்லோர் இயல்பு வேறல்லவா? ஒலிம்பிக் வாள் சண்டையில் பதக்கம் இழந்த பவானி தேவியை வீடுதேடிப்போய் சந்தித்து, தங்க செயின் பரிசளித்து, “விடாமுயற்சியுடன் போராடு… அடுத்த முறை வெல்லலாம்” என நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நடிகர் சசிகுமார். நன்றி உடன்பிறப்பே…” என்று குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.