முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசம் : துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு!

 

முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசம் : துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு!

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை தங்க கவசம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை வரும் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும்.

முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசம் : துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு!

இந்நிலையில் மதுரையில் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுஇருந்த தங்க கவசத்தை, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் இன்று பெற்று கொண்டார். இந்த கவசமானது தேவர் நினைவாலயம் பொறுப்பாளரிடம் வழங்கப்படும். இதை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தந்து ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். குருபூஜை விழா நிறைவு பெற்றதும் தங்க கவசமானது மீண்டும் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்க கவசம் : துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திடம் ஒப்படைப்பு!

முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ம் ஆண்டு ரூ. 4 கோடி மதிப்பிலான சுமார் 13.5 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை பசும்பொன் கிராமத்திற்கு நேரில் வந்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.