தங்கம் விலை மீண்டும் உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

 

தங்கம் விலை மீண்டும் உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இரண்டாம் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்தை சந்திக்கிறது. ஊரடங்கிற்கு முன்னர் ரூ. 33 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை தற்போது ரூ.37 ஆயிரத்து நெருங்கியுள்ளது. கடந்த ஆண்டு நிலவிய தொழில்துறையில் நிலவிய தேக்கம், தங்கம் விலையை வரலாறு காணாத அளவுக்கு ஏற்றத்தை சந்திக்க வைத்தது. தற்போது மீண்டும் தொழில்துறையில் தேக்கம் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுவதால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தில் உள்ளது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு… வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,615க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.36,920க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,300க்கும் விற்பனையாகிறது.