எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்தியங்கரா தேவி!

 

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்தியங்கரா தேவி!

பிரத்தியங்கரா தேவி பயத்தை போக்குபவள். எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்துவிடும். சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். பிரத்தியங்கரா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும், எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா தேவி விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். பிரத்தியங்கரா தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்தியங்கரா தேவி!
எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் பிரத்தியங்கரா தேவி!


மனித வாழ்வில் சக்தி வழிபாடு என்பது மகத்துவமும் மகோன்னதமும் நிறைந்தது. தேவியை உபாஸித்து வந்தால், சர்வ பலத்துடன் மனோபலமும் கிடைக்கப் பெறலாம் என்றும் இல்லத்தின் அனைத்து வளமான நம்மை வந்தடையும் என்பதும் உறுதி என்கிறார்கள் அவளை நம்பி வேண்டின பக்தர்கள். மூல மந்திரம் ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட். கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் இம்மூல மந்திரத்தை தினமும் பயபக்தியுடன் பாராயணம் செய்து, பிரத்தியங்கரா தேவியை தொடர்ந்து வழிபட்டு வந்தால், துக்கங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் நமக்கு விடுதலையை தந்தருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்து, எதிர்ப்புகளை ஒழித்துக்காப்பாள். பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்க செய்வாள் என்பதும் ஐதீகம். ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.
ஓம் அபரஜீதாய வித்மஹே பிரத்யங்கிராய தீமஹி தந்நோ உக்ர ப்ரசோதயாத்

எனும் பிரத்தியங்கரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. பிரத்தியங்கரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்தியங்கிரா தேவி.