“காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு” -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .

 

“காதலனை மறந்துடு ,இல்லேன்னா இறந்துடு” -கிரிக்கெட் ஸ்டம்பால் மகளை தாக்கிய தந்தை .


தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்த தன்னுடைய மகளை ஒரு தந்தை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Image

கோவாவில் வசிக்கும் 46 வயதான தொழிலதிபர் சுனில்குமார் ராஜன் என்பவர் அங்கு பல தொழில்கள் செய்து வருகிறார் .அவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளது . அவருக்கு ஒரே ஒரு மகளிருக்கிறார் .கல்லூரியில் படித்து வரும் அந்த 20 வயது மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார் .இதனால் அந்த காதலரும் அவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள்
அதனால் முதலில் அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் தன்னுடைய காதலை பற்றி கூறி,அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார் .ஆனால் அந்த தந்தை அவரின் காதலனை பற்றி விசாரித்த போது அவர் எந்த வேலையுமில்லாமலும் வேறு சாதியை சேர்ந்தவராக இருந்ததாலும் அவர் அந்த காதலனை அவருக்கு கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் தரவில்லை .
இதனால் அந்த பெண்ணுக்கும் ,அந்த தந்தைக்கும் தினமும் சண்டை வந்துகொண்டிருந்தது .கடந்த வியாழக்கிழமை அந்த மகள் அவரின் அப்பாவிடம் மீண்டும் தன்னுடைய காதலனோடு சேர்த்து வைக்குமாறு கடுமையாக சண்டை போட்டுள்ளார் .அப்போது இருவருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அந்த தந்தை அங்கிருந்த கிரிக்கெட் ஸ்டம்ப் கொண்டு அந்த மகளின் தலையில் தாக்கியுள்ளார் .

இதனால் கடுமையாக காயமுற்று ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த பெண்ணை, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தூக்கி சென்றார்கள் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் அந்த பெண் இறந்தார் .இதனால போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள் .