கஞ்சா செடி பயிரிடுவதற்கு கோவா சட்டத்துறை அனுமதி!

 

கஞ்சா செடி பயிரிடுவதற்கு கோவா சட்டத்துறை அனுமதி!

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலெல்லாம் கஞ்சாவை சட்டபூர்வமாக மருந்தாகப் பயன்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் மட்டும் அது தடைசெய்யப்பட்ட போதைப்பொருளாகக் கருதப்பட்டது. கஞ்சாவில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளதாகவும், எனவே அதை மருந்தாகப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் இந்தியாவில் பலரும் குரல் எழுப்பி வந்தனர். தடை செய்யப்பட்டிருக்கும்போதே இளைஞர்கள் அதைப் போதைப்பொருளாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி அனுமதி வழங்க இந்திய அரசு தயக்கம் காட்டியது, இதனிடையே கஞ்சாவை மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கு ஐநா ஒப்புதல் அளித்தது.

கஞ்சா செடி பயிரிடுவதற்கு கோவா சட்டத்துறை அனுமதி!

இதனையடுத்து மருத்துவ பயன்பாடுகளுக்காக கஞ்சா செடி பயிரிடுவதற்கான பரிந்துரைக்கு கோவா சட்டத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவா அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கஞ்சா செடியின் முக்கிய ஊக்கப் பொருளான டெட்ரா ஹைட்ரோ கேனாபினால் (THC – Tetra Hydro Cannabinol) வலி நிவாரணியாக மிகவும் பலன் அளிக்கக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.