பணமோசடி வழக்கு: ஞானவேல்ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை நீட்டிப்பு!

 

பணமோசடி வழக்கு: ஞானவேல்ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை நீட்டிப்பு!

ராமநாதபுரத்தை சேர்ந்த துளசி மணிகண்டன் என்பவரிடம் நீதிமணி மற்றும் ஆனந்தன் ஆகிய 2 பேரும் பணம் வாங்கி நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். தன்னிடம் பணத்தை வாங்கி விட்டு மோசடி செய்ததாக, துளசி மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு பணம் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஞானவேல்ராஜாவை ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஞானவேல்ராஜா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பணமோசடி வழக்கு: ஞானவேல்ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை நீட்டிப்பு!

மேலும், கைது செய்வதை தடுக்கும் விதமாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால் கொரோனா உறுதியானதால் கடந்த 14 ஆம் தேதி ஞானவேல்ராஜா ஆஜராகவில்லை என்பதால், அவரை கைது செய்வதற்கான இடைக்காலத் தடை ஆகஸ்ட் 27 (இன்று) வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மீண்டும் ஞானவேல்ராஜா மீதான பண மோசடி வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றும் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. அதனால், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீடித்து உத்தரவிட்டுள்ளனர்.