மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ஜிகே வாசன்

 

மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ஜிகே வாசன்

நாடு முழுவதுமுள்ள 80 கோடி மக்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான இலவச உணவு தானியங்களை வழங்கும் மத்திய அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ஜிகே வாசன்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு, 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் இலவச உணவு தானியங்களை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மக்களுக்கு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்து இருக்கும் நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு பசி போக்க உதவிகரமாக உணவு தானியங்களை அளிக்க இருப்பது மிகுந்த வரவேற் பிற்குரியது. இந்த அறிவிப்பை வரவேற்று மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.