“பொய்யான வாக்குறுதிகளை தவிர இந்த அரசு வேறென்ன செய்தது?”: ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

 

“பொய்யான வாக்குறுதிகளை தவிர இந்த அரசு வேறென்ன செய்தது?”: ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

தமிழக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வெளிப்படைத் தன்மையோடு செலுத்துக என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“பொய்யான வாக்குறுதிகளை தவிர இந்த அரசு வேறென்ன செய்தது?”: ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

இதுகுறித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அரசு கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதிலும், தடுப்பூசி செலுத்துவதிலும், பாதிப்புகள் மற்றும் இறப்புகளை தெரிவிப்பதிலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டது. மேலும் தற்போது ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அதிக அளவில் முன்வருகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடனேயே உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கொரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றது. பிறகு தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும் , அங்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் தமிழ்நாடு அரசே வெளிச்சந்தையில் தடுப்பு மருந்துகளை வாங்கி பொது மக்களுக்கு அளிக்கும் என்றும் புதிய கதை ஒன்று சொன்னது. இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யான வாக்குறுதிகளை அளித்து அதை தவிர வேற என்ன செய்தது இந்த அரசு?

“பொய்யான வாக்குறுதிகளை தவிர இந்த அரசு வேறென்ன செய்தது?”: ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

சரியான முறையில் திட்டமிடாமல் ,ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது தடுப்பூசி மருந்து எவ்வளவு பேருக்கு தேவைப்படும், அதில் எத்தனை பேர் இணை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், யாருக்கு முதலில் அளிக்க வேண்டும் என்ற திட்டமிடல் இல்லை. எனவே மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி வந்த உடனேயே அதன் உண்மை தன்மையை உணராமல் தடுப்பூசி மையங்களில் அதிக அளவு பொதுமக்கள் விடியற்காலை முதலே கூடிவிடுகின்றனர். இதனால் நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்படுகிறது. மக்களிடையே தடுப்பூசி எண்ணிக்கை குறித்த உண்மையை கூறாமல் மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி கடமையில் இருந்து திமுக அரசு செய்து வருகிறது. பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன் வருவதை தவிர்க்க கடந்த 15 நாட்களாக தொற்று எண்ணிக்கையும், இறப்பையும் திமுக அரசு குறைத்து காட்டுவதாக செய்திகள் வருகின்றன.

இந்த அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு 30 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பி விட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அதை முறையாக மக்களுக்கு செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை. கடந்த 13ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவேண்டும் என்று கோரிக்கை கோரி மாண்புமிகு பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதம் எழுதுவதோடு நிற்காமல் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் அழுத்தம் கொடுத்து தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

“பொய்யான வாக்குறுதிகளை தவிர இந்த அரசு வேறென்ன செய்தது?”: ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்களில் பலர் இரண்டு மாதங்கள் கடந்த பின்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி இல்லாமல் தவிக்கிறார்கள். கோவாக்சின் மருந்து போட்டவர்கள் அதே மருந்தை போட வேண்டும் என்றும் கோவிஷீல்டு மருந்து போட்டவர்கள் அதே மருந்து போடவேண்டும் என்றும் இவை இரண்டும் பல தடுப்பூசி போடும் மையங்களில் இருப்பில் இல்லை என்றும் பொதுமக்கள் அழைக்கும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

எனவே அரசியல் காழ்புணர்ச்சி தவிர்த்து கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதை கைவிட்டு மக்களை காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும். மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு கடந்த 2 மாதங்களில் எத்தனை இலட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதையும் மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும் தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.