‘செல்பி எடுக்கும் போது வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண்கள்’…கயிறு கட்டி காப்பாற்றிய போலீசார்!

 

‘செல்பி எடுக்கும் போது வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண்கள்’…கயிறு கட்டி காப்பாற்றிய போலீசார்!

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மலைப்பகுதியில் ஆறு ஒன்று இருக்கிறது. அந்த ஆற்றில் நேற்று இளம்பெண்கள் சிலர் நீராட சென்றுள்ளனர். செல்ஃபி மோகத்தில் இருந்த இளம்பெண்கள், அங்கிருந்து பாறை ஒன்றில் அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டு இருந்துள்ளனர். அச்சமயம் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்ததை அறியாத பெண்கள், போனிலேயே கவனத்தை செலுத்தி உள்ளனர். இதனிடையே தண்ணீர் வெள்ளம் போல வேகமெடுத்ததால் பெண்கள் அதில் சிக்கி, காப்பாற்ற சொல்லி சத்தம் போட்டுள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு வந்த போலீசார், பெண்களை கயிறு கட்டி வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.

‘செல்பி எடுக்கும் போது வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண்கள்’…கயிறு கட்டி காப்பாற்றிய போலீசார்!

இதனை பற்றி பேசிய அதிகாரிகள், செல்பி எடுப்பதில் தவறு இல்லை என்றாலும் ஆபத்தான இடங்களில் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் திடீரென வெள்ளம் வந்துள்ளது. அதனை கவனிக்காமல் இவர்கள் செல்பி எடுத்ததால் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். மிகவும் கடினப்பட்டு தான் அவர்களை காப்பாற்றினோம் என்று கூறியதோடு அந்த பெண்களுக்கு அறிவுரை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.