காதலியின் பெற்றோர் எதிர்ப்பு – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

 

காதலியின் பெற்றோர் எதிர்ப்பு – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

காதலுக்கு காதலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் இளைஞர்.

காதலியின் பெற்றோர் எதிர்ப்பு – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை வியாசர்பாடி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் அதே பகுதியில் வசித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து அவர்கள் கடும் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

இதனால் காதலியை திருமணம் செய்ய முடியாது என்பதை உணர்ந்துகொண்ட நரேஷ் குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். தனது வேட்டியால் இரும்பு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

காதலியின் பெற்றோர் எதிர்ப்பு – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் பெற்றோரும் உறவினர்களும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றபோது நரேஷ் குமார் தூக்கில் சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ந்தனர்.

தகவலறிந்த செம்பியம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். நரேஷ் குமாரின் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.