வீட்டிற்கு வந்து ஆபாசமாக பேசினார் … அவமானப்படுத்தினார்… உடலை எரித்துக்கொண்ட காதலி!- சிக்கிய காதலன், தந்தை

 

வீட்டிற்கு வந்து ஆபாசமாக பேசினார் … அவமானப்படுத்தினார்… உடலை எரித்துக்கொண்ட காதலி!- சிக்கிய காதலன், தந்தை

மகனின் காதல் விவகாரத்தால் கொந்தளித்த அவரது தந்தை, இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த காதலி உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ஏழுமலை- கன்னியம்மாள் தம்பதியின் மகள் வெண்ணிலா, ஆரணியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். ஆரணி சைதாப்பேட்டை கமண்டலநாகநதி தெருவில் வசித்து வரும் நாகராஜின் மகன் பிரசாந்தும், வெண்ணிலாவும் காதலித்து வந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த நாகராஜ், வெண்ணிலாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசியதோடு, வெண்ணிலாவின் தாயார் கன்னியம்மாளை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, ஆரணி நகர காவல்நிலையத்தில் கன்னியம்மாள் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இருதரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் சமரசம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இதனிடையே, மனமுடைந்த வெண்ணிலா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அப்போது, எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து வெண்ணிலாவை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைகாக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வெண்ணிலா உயிரிழந்தார்.

வீட்டிற்கு வந்து ஆபாசமாக பேசினார் … அவமானப்படுத்தினார்… உடலை எரித்துக்கொண்ட காதலி!- சிக்கிய காதலன், தந்தை

இதனிடையே, தனது மகளை காதலரின் தந்தை மிரட்டினார் என்றும், இதனால் அவமானம் தாங்கமுடியாமலும் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். தந்தை, மகன் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெண்ணிலாவின பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரின், வெண்ணிலாவை தற்கொலைக்குத் துாண்டியதாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காதலர் பிரசாந்த், அவரது தந்தை நாகராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.