“அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா மார்க்கை அள்ளி போடுவார்” -மாணவியை கடத்திய ஆசிரியர்

 

“அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா மார்க்கை அள்ளி போடுவார்” -மாணவியை கடத்திய ஆசிரியர்

தன்னிடம் படிக்கும் ஒரு மாணவியை கடத்திய ஒரு ஆசிரியரை போலீசார் கைது செய்தார்கள் .


உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஒரு மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டார் . அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரளித்து அந்த மாணவியை போலீசார் தேடி வந்தார்கள் .இந்நிலையில் அந்த 14 வயது சிறுமி சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சூரிர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்த மாணவி ஹபூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆசிரியரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த சிறுமியின் தந்தை வியாழக்கிழமை தனது மகள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டதாகக் புகாரளித்ததையடுத்து, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமி சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

.பொலிஸாரின் தீவிர கண்காணிப்பின் அவரின் , ஆசிரியரான ஃபெரோஸ் கான் அந்த மாணவியை கடத்தியதை கண்டறிந்தார்கள் .பின்னர் அவரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார் .,அப்போது குற்றம் சாட்டப்பட்டஅந்த ஆசிரியர் அந்த மைனருடன் உறவு கொண்டிருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டரியப்பட்டது

இதனால் அந்த ஆசிரியர் மீது 364 (கடத்தல்) மற்றும் 376 (கற்பழிப்பு), அத்துடன் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் உள்ளிட்ட பல்வேறு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆய்வாளர் தெரிவித்தார். அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். சிறுமி மற்றும் ஆணின் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

“அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டா மார்க்கை அள்ளி போடுவார்” -மாணவியை கடத்திய ஆசிரியர்