சிறுமிக்கு பாலியல் தொல்லை: காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குண்டர் சட்டத்தில் கைது!

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குண்டர் சட்டத்தில் கைது!

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவராக உள்ளார். சொந்தமாக ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. அதாவது பெரியசாமியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்த சிறுமியிடம் ஆபாச படம் காண்பித்து அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குண்டர் சட்டத்தில் கைது!

இதுகுறித்து பவானி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பெரியசாமியை தேடி வந்தனர். அத்துடன் ஆறு மாதங்களுக்கு பின், ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் அவர் சரணடைந்ததை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காந்திய மக்கள் இயக்க மாவட்ட தலைவர் குண்டர் சட்டத்தில் கைது!

விசாரணையில் பெரிய சாமியின் மீதான குற்றம் நிரூபணமானதாலும், அவர் மீது ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் இரு வழக்குகள், டவுன் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளதால், பெரியசாமியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியை கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.