தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாட்ச்மேன் கைது

 

தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாட்ச்மேன் கைது

ஆவடி அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாட்ச்மேன் கைது செய்யப்பட்டார்.

ஆவடி அடுத்த பொத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் பெங்களூரை சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் 12வயது சிறுமிக்கு காப்பகத்தில் பணிபுரியும் வாட்ச்மேன் தேவேந்திரன்(40) பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் தாயார் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டியிடம் புகார் அளித்த நிலையில்,கமிட்டி தலைவர் வனஜா முரளிதரன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.

தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாட்ச்மேன் கைது

இதையடுத்து ஆவடி மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், வாட்ச்மேன் தேவேந்திரன் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் தேவேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.