8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

 

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

ஈரோடு

ஈரோட்டில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் பகுதியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரபூல் மொண்டால் என்ற இளைஞரும் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் 8 வயது பெண் குழந்தைக்கு, ரபூல் மொண்டால் பாலியல் அளித்ததாக கூறப்படுகிறது.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து, கடந்த ஆண்டு ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலயத்தில் அந்த பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரபூல் மொண்டாலை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி விசாரணை நிறைவடைந்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மாலதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரபூல் மொண்டாலிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் இழப்பீடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்..