`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்!’- சாத்தான்குளம் அருகே நடந்த கொடூரம்

 

`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்!’- சாத்தான்குளம் அருகே நடந்த கொடூரம்

வீட்டிற்கு டிவி பார்க்க வந்த சிறுமியை கல்லூரி மாணவனும், அவனது நண்பரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை தண்ணீர் டிரம்பில் வைத்து ஓடையில் வீசி சென்ற சம்பவம் சாத்தான்குளம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்!’- சாத்தான்குளம் அருகே நடந்த கொடூரம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை கிராமத்தின் அருகில் உள்ள ஓடை பாலத்தில் வாலிபர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த வாலிபர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமி கழுத்து, உதடுகளில் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து உடனடியாக ஊரில் உள்ளவர்களுக்கு வாலிபர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் சாத்தான்குளம் காவல்துறையினருக்கு ஊர் மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

கல்விளையை சேர்ந்த 9 வயது சிறுமி என்று தெரியவந்ததோடு, இதற்கு காரணமான இந்திரா நகரைச் சேர்ந்த வல்லவன் மகன் முத்தீஸ்வரன் (19). இவரது நண்பர் நித்தீஸ்வரன் (19) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். கல்லூரி மாணவனான நித்தீஸ்வரன் நேற்று முத்தீஸ்வரன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, 2 பேரும் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் வீட்டிற்கு 9 வயது சிறுமி டி.வி. பார்க்க வந்துள்ளார். டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து வெளியே தெரிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால் சிறுமியை கொலை செய்துள்ளனர். பின்னர் இரண்டு பேரும் வீட்டில் இருந்த தண்ணீர் நிரப்பும் டிரம்மில் சிறுமியின் உடலை தூக்கிப் போட்டு ஓடை பாலம் அருகே டிரம்மை வைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

`சிறுமியை வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன், நண்பன்; உடலை டிரம்பில் வைத்து ஓடையில் வீசினர்!’- சாத்தான்குளம் அருகே நடந்த கொடூரம்

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாரா? என்பது தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

சாத்தான்குளம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.