17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… கர்நாடக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… கர்நாடக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

கோவை

பொள்ளாச்சி அருகே 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த கர்நாடக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் கணேசன் (22). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனியார் மசாலா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது, கணேசனுக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரிந்த பொள்ளாச்சியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணேசன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அவரை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.

17 வயது சிறுமியை கடத்தி திருமணம்… கர்நாடக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமியை காணாததால் பல்வேறு இடங்களில் தேடிய பெற்றோர், பின்னர் மகளை கண்டுபிடித்து தரக் கோரி வடக்கிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், சிறுமியை கணேசன் கடத்திச் சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் சிறுமியுடன் காவல் நிலையம் வந்த கணேசனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர் சிறுமியை திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனால், இந்த வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு சிறுமியை திருமணம் செய்த கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.