கோவிலுக்கு சென்ற பெண் -காத்திருந்த வாலிபர்கள் -காதலன் முன்பு நடந்த கொடுமை

 

கோவிலுக்கு சென்ற பெண் -காத்திருந்த வாலிபர்கள் -காதலன் முன்பு நடந்த கொடுமை

வருங்கால கணவனோடு கோவிலுக்கு சென்ற பெண்ணை மூன்று வாலிபர்கள் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

கோவிலுக்கு சென்ற பெண் -காத்திருந்த வாலிபர்கள் -காதலன் முன்பு நடந்த கொடுமை

உத்தரபிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் பிஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள ஹர்கிதா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு காட்டில் ஒரு கோவில் உள்ளது .அந்த கோவிலுக்கு நிறைய பெண்கள் சாமி கும்பிட வருவார்கள்

அதன் படி பாபானி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு வாலிபர் சனிக்கிழமையன்று, தனது வருங்கால மனைவியுடன், வனப்பகுதியில் உள்ள மோட்டகிபஹாடி மலையில் உள்ள அந்த கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றார் .அப்போது அந்த காட்டில் மூன்று வாலிபர்கள் மரம் வெட்டி கொண்டிருந்தனர் .அந்த காதலர்கள் கோவிலுக்கு வந்த போது ,அந்த காட்டில் யாருமில்லை .அந்த வாலிபர்கள் மட்டும் இருந்தனர் .

அப்போது அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை கடத்தி செல்ல திட்டமிட்டனர் .அதனால் அந்த காதலனை அடித்து ,உதைத்து அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டி வைத்தனர் .பிறகு  அந்த பெண்ணை  மூவரும் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .அதன் பிறகு அந்த பெண் அங்கிருந்து தன்னுடைய காதலனோடு தப்பித்து வீட்டுக்கு வந்தார் .அவர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார்

அதன் பின்னர், அந்த பெண்ணின்  குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர், அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்,.அந்த  பெண்  மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்