கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிக்கிய சிறுமி… உடல் சிதறி உயிரிழந்த சோகம்!

 

கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிக்கிய சிறுமி… உடல் சிதறி உயிரிழந்த சோகம்!

கல்குவாரிகளை வெடி வைத்து தகர்ப்பது வழக்கம். அதே போல, நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டி என்னும் பகுதியில் சுபாஷ் என்பவர் குத்தகைக்கு விட்டுள்ள கல்குவாரியிலும் கற்கள், ஜல்லிகள் உடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த குவாரியில், வையப்பமலை பகுதியை சேர்ந்த மூர்த்தி என்னும் தொழிலாளி கல் உடைக்கும் பணி செய்து வருகிறார். மூர்த்தி அவரது குடும்பத்துடன் குவாரியிலேயே தங்கி பணிபுரிந்து வருகிறாராம். இவரது மகள் நந்தினியும் மகன் செளந்தர்ராஜனும் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிக்கிய சிறுமி… உடல் சிதறி உயிரிழந்த சோகம்!

அப்போது பாறைகளை தகர்க்க வெடி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அறியாத சிறுவர்கள் அங்கேயே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அச்சமயம் பாறையில் தகர்க்கப்பட்ட கல் ஒன்று சிறுமியின் தலை மீது விழுந்ததால், சிறுமி உடல் சிதறி அங்கேயே உயிரிழந்துள்ளார். மேலும் அங்கிருந்த சிறுவன் மீதும் கல் விழுந்ததில், அவனும் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து சிறுவன் நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமி உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.