‘எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை’… எஸ்.பி தகவல்!

 

‘எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை’… எஸ்.பி தகவல்!

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையம் என்னும் பகுதியில் வசித்து வரும் பெரியசாமி என்பவரது மகள்(வயது 14), நேற்று மாலை ஊருக்கு வெளியே முள்ளுக்காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்துப் பேசிய திருச்சி மண்டல ஐஜி, குற்றவாளிகளைப் பிடிக்க 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.

‘எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை’… எஸ்.பி தகவல்!

இன்று காலை சிறுமியின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த நிலையில், சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனத் தெரிய வந்தது.

‘எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி பாலியல் வன்கொடுமையால் இறக்கவில்லை’… எஸ்.பி தகவல்!

இந்த நிலையில் சிறுக்கி எரித்துக் கொல்லப்பட்டது குறித்துப் பேசிய எஸ்.பி ஜியாவுல்ஹக், பாலியல் வன்கொடுமையால் சிறுமி இறக்கவில்லை என்றும் தீக்காயத்தால் சிறுமி இறந்தாரா அல்லது அதற்கு முன்பே உயிரிழந்து விட்டாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.