‘சிறுமி உடல் கருகி உயிரிழப்பு’..கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றியதால் நேர்ந்த சோகம்!

 

‘சிறுமி உடல் கருகி உயிரிழப்பு’..கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றியதால் நேர்ந்த சோகம்!

அம்பத்தூர் அருகே விளக்கு ஏற்றிய சிறுமி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் அருகே வசித்து வந்த சிறுமி பிரியதர்ஷினி(11). இவர் கடந்த 27ம் தேதி கார்த்திகை தீபத்தின்று வீட்டில் விளக்கு ஏற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, சிறுமியின் உடையில் திடீரென தீப்பற்றிய நிலையில் அதனை உணராத சிறுமி, விளக்கு ஏற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தீ கிடுகிடுவென உடை முழுவதும் பரவி, சிறுமியின் உடலிலும் தீப்பிடிக்க தொடங்கியதால் சிறுமி அலறித் துடித்துள்ளார்.

‘சிறுமி உடல் கருகி உயிரிழப்பு’..கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றியதால் நேர்ந்த சோகம்!

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும், சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில், சிறுமி பிரியதர்ஷினிக்கு சிகிச்சை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பிரியதர்ஷினி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். சிறுமியின் மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.