‘திருமணத்துக்கு நகை சேர்க்க’..பெற்றோர்கள் படும் துயரத்தைப் பார்க்க முடியாமல் இளம்பெண் தற்கொலை!

 

‘திருமணத்துக்கு நகை சேர்க்க’..பெற்றோர்கள் படும் துயரத்தைப் பார்க்க  முடியாமல் இளம்பெண் தற்கொலை!

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வரும் சம்பத்(51) என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு 21 வயதான ரேவதி என்னும் மகள் இருந்தார். ரேவதிக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து வைக்கலாம் என பெற்றோர்கள் முடிவு செய்து நகை சேர்க்க ஆரம்பித்துள்ளனர். நேற்று சம்பத் தனது மாமியார் வீட்டில் இருக்கும் அரை சவரன் நகையை வாங்கி வருவதற்காக அவரது மனைவியுடன் சென்றுள்ளார்.

‘திருமணத்துக்கு நகை சேர்க்க’..பெற்றோர்கள் படும் துயரத்தைப் பார்க்க  முடியாமல் இளம்பெண் தற்கொலை!

பிறகு அவர்கள் மாலை வீடு திரும்பும் போது மக்களுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் ரேவதி போன் எடுக்காததால் குழப்பம் அடைந்த பெற்றோர் வீட்டுக்குச் சென்று பார்த்த போது, ரேவதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார். அதனைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனே அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற சோமங்களம் போலீசார் ரேவதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தனக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் படும் கஷ்டத்தை பார்க்க முடியாமல் ரேவதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.