கடன் தொல்லையால் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 

கடன் தொல்லையால் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருச்சி

திருச்சி அருகே கடன் தொல்லையால் பெண் ஒருவர், சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பட்டவர்த்தி பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (60). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (55). இவர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக போதிய லாபம் கிடைக்கவில்லை. இதனால் குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றுள்ளனர்.

கடன் தொல்லையால் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

இந்த நிலையில், கொரோனா 2ஆம் அலை காரணமாக மீண்டும் ஊரடங்கு அமலானதால் போதிய வருமானமின்றி தவித்து வந்தனர். இதனால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு அழுத்தம் கொடுத்ததால், சரஸ்வதி மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு 1 மணி அளவில் சரஸ்வதி கரூரில் இருந்து தாம்பரத்திற்கு சென்ற சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.