திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

 

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

திருவாரூர்

திருவாரூரில் திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவாரூர் அருகேயுள்ள தியானபுரம் சாப்பாவூரை சேர்ந்தவர் பிரபாகரன் (32). டிரம்ஸ் கலைஞர். இவருக்கு, அழகிரி காலனியை சேர்ந்த நாகராஜனின் மகள் திவ்யா உடன்(24), கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. பிரபாகரன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இதனால் நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து திவ்யாவுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனால், நாகராஜன் தனது மகள் திவ்யாவை, வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் அண்ணன் உயிரிழந்ததால், திவ்யாவும், அவரது வீட்டாரும் துக்க நிகழ்வுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, கடந்த 4 நாட்களுக்கு முன்பு உறவினர்களும், கிராமத்தினரும் பிரபாகரன் – திவ்யாவை சமரசம் செய்து மீண்டும் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளனர். இதனால், திவ்யா கணவர் வீட்டிற்கு சென்றுள்ள்ளார்.

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை… கோட்டாட்சியர் விசாரணை!

இந்த நிலையில், நேற்று காலை திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரபாகரன், போனில் நாகராஜனுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நாகராஜன், தனது மகளிடம் ரூ.50 லட்சம் வரதட்சணை கேட்டு பிரபாகரன் அடித்து கொடுமை செய்ததாகவும், இதனால் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருணமாகி 7 மாதத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பம் குறித்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.