“ஏன்டா என்னை கண்டமாக்கிட்டு கண்டவளுக்கு தாலி கட்டுறியா?” -காதலனின் கல்யாணத்தில் காதலி செஞ்ச வேலை

 

“ஏன்டா என்னை கண்டமாக்கிட்டு கண்டவளுக்கு தாலி கட்டுறியா?” -காதலனின் கல்யாணத்தில் காதலி செஞ்ச வேலை


தன்னை ஏமாற்றிய காதலனின் கல்யாணத்தில் ஒரு காதலி உள்ளே புகுந்து மணமகளை கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார்

“ஏன்டா என்னை கண்டமாக்கிட்டு கண்டவளுக்கு தாலி கட்டுறியா?” -காதலனின் கல்யாணத்தில் காதலி செஞ்ச வேலை

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் ஒரு 18 வயதான பெண்,அதே ஊரை சேர்ந்த கோபால் ராம் என்பவரை காதலித்தார் .ஆனால் கோபால் ராம் திடீரென அந்த பெண்ணை விடுத்து வேறு ஒரு பெண்ணை திருமணம் முடிக்க போனார்.அதனால் அவரின் காதலி கோபமாக இருந்தார்
டிசம்பர் 1 ம் தேதி அருகிலுள்ள ஷேக்புரா மாவட்டத்தில் கோபால் ராமின் திருமணம் நடைபெற்றது
இந்த திருமண விழாவுக்குப் பிறகு, கோபால் ராம் தனது மோரா தலாப் கிராமத்திற்கு மனைவி மற்றும் உறவினர்களுடன் திரும்பி வந்தார்.அப்போது இந்த திருமணத்தால் கோபமாக இருந்த அவரின் காதலி அவரை பழி வாங்க அங்கு வந்தார்.
அந்த இரவில் குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலோர் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது , அவர் படுக்கையறைக்குள் நுழைந்து புதிதாக திருமணமான பெண்ணின் தலைமுடியை வெட்டினார், பின்னர் ஃபெவி க்விக்கை அவள் கண்களில் ஊற்றினார்.
இதனால் அந்த மணமகள் வலியால் கத்தினார். சத்தம் கேட்டு அந்த காதலி அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அங்கிருந்தவர்கள் அந்த காதலியை பிடித்தார்கள் .


பின்னர் அவரை அடித்து உதைத்து இரவு முழுவதும் பிணைக் கைதியாக வைத்திருந்தார்கள் .பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்தை அடைந்ததும், அவர்கள் அந்த பெண்ணை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
“பாதிக்கப்பட்ட மண பெண் தற்போது பீகார் ஷெரீப்பில் உள்ள சதர் மருத்துவமனையில் பலத்த தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கண் பார்வையை இழக்கக்காமலிருக்க அவருக்கு சிகிச்சையளிக்க பட்டு வருகிறது ” என்று ஒரு அதிகாரி கூறினார்.

“ஏன்டா என்னை கண்டமாக்கிட்டு கண்டவளுக்கு தாலி கட்டுறியா?” -காதலனின் கல்யாணத்தில் காதலி செஞ்ச வேலை