பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்- போலீசார் விசாரணை!

 

பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்- போலீசார் விசாரணை!

நாமக்கல்

நாமக்கல் அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா. கூலி தொழிலாளி. இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மீண்டும் கர்ப்பமடைந்த கஸ்தூரிக்கு, கடந்த 4 ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது.

பிறந்து சில நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்- போலீசார் விசாரணை!

இதனையடுத்து, கஸ்தூரி பொட்டிரெட்டிபட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி அன்று குழந்தை உடல்நல குறைவால் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் சடலத்தை புதைத்தனர். குழந்தை மரணத்தில் சந்தேகமடைந்த, சுகாதார துறையினர் இதுகுறித்து எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, பொட்டிரெட்டிபட்டியில் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை நேற்று தோண்டி எடுத்து வருவாய் துறையினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.