‘மதுபோதையில்’.. டிராபிக் போலீசாரை ஆபாசமாக திட்டிய இளம்பெண் கைது!

 

‘மதுபோதையில்’.. டிராபிக் போலீசாரை ஆபாசமாக திட்டிய இளம்பெண் கைது!

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மதுக்கடைகள் அனைத்தும் திறந்திருக்கும் நிலையில், ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் பலர் குடித்து விட்டு கொண்டாட்டம் செய்து வருவது மீண்டும் தலைதூக்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனால் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை டிராபிக் போலீசார், திருவான்மியூர் பஸ் ஸ்டான்ட் பின்பக்கம் இருக்கும் பகுதியில் வேகமாக சென்ற கார் ஒன்றை மடக்கி பிடித்தனர்.

‘மதுபோதையில்’.. டிராபிக் போலீசாரை ஆபாசமாக திட்டிய இளம்பெண் கைது!

அந்த காரில் அளவுக்கு அதிகமாக குடித்திருந்த ஒரு இளைஞரும் ஒரு இளம்பெண்ணும் இருந்த நிலையில், அந்த இளம்பெண் போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதையடுத்து குடித்துவிட்டு காரில் வந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் டோட்லா சேஷூ பிரசாத் என்றும் இளம்பெண் காமினி என்றும் தெரிய வந்துள்ளது.

‘மதுபோதையில்’.. டிராபிக் போலீசாரை ஆபாசமாக திட்டிய இளம்பெண் கைது!

இதையடுத்து பெண்ணின் உறவினரை அழைத்த டிராபிக் போலீசார், திருவான்மியூர் காவல் நிலையத்தில் இருவர் மீதும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், அந்த இளம்பெண் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தான் மீடியாவில் பணி புரிவதாகக் கூறி போலீசாரை ஆபாசமாக திட்டியுள்ளார். அதனிடிப்படையில், இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், குடித்துவிட்டு கார் ஓட்டிய சச்சினையும் போலீசார் கைது செய்தனர்.