சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது

 

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது

ஈரோடு

ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு சாஸ்திரி நகர் விவேகானந்தர் வீதியை சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் லோகேஷ்(23). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார். தனியாக வசித்து வந்த லோகேஷ், தனது தங்கை முறையிலான 16 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை- ஆம்புலன்ஸ் ஓட்டுநர் போக்சோவில் கைது

இந்த நிலையில், அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடந்த மாதம் வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்றிரவு ஈரோடு பகுதியில் நின்றிருந்த இவருரையும் தகவலின் பேரில் போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை கடத்திச்சென்ற லோகேஷ், அவரை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, லோகேஷ் மீது கடத்தல், குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.