‘இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமை’ : கண்ணீர் மல்க பேசிய குலாம் நபி ஆசாத்!

 

‘இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமை’ : கண்ணீர் மல்க பேசிய குலாம் நபி ஆசாத்!

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத், தான் இந்திய முஸ்லீம் ஆக இருப்பதில் பெருமையடைகிறேன் என தெரிவித்தார்.

காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. குலாம் நபி ஆசாத் உட்பட 4 எம்.பி.க்களின் கடைசி மாநிலங்களவை கூட்டத்தொடர் இது. இந்த நிலையில் அவையில் தனது கடைசி உரையாற்றிய குலாம், பாகிஸ்தானில் சூழ்நிலைகளை பற்றி தெரிந்து கொள்ளும் போது இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமையடைகிறேன். பாகிஸ்தானுக்கு செல்லாத அதிர்ஷ்டசாலிகளுள் நானும் ஒருவன். தீவிரவாதமும், பயங்கரவாதமும் ஒழிய வேண்டும். நாட்டுக்காக பாடுபடும் வீரர்களின் உயிர்த் தியாகம் ஒரு முடிவுக்கு எப்போது வரும்? என கண்ணீர் ததும்பிய கண்களுடன் பேசினார்.

‘இந்திய முஸ்லீமாக இருப்பதில் பெருமை’ : கண்ணீர் மல்க பேசிய குலாம் நபி ஆசாத்!

முன்னதாக கூட்டத்தொடரில் குலாம் நபி ஆசாத்துக்கு புகாழாரம் சூட்டி பேசிய பிரதமர் மோடி, அவருக்கு ஒரு போதும் தலைக்கனம் இருந்ததில்லை என்றும் சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட போது அவர்களை குலாம் தனது உறவினர்கள் போல பார்த்துக் கொண்டதாகவும் அவருக்கு என்றென்றும் தான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றும் கண்ணீர் மல்க பேசினார்.