“க்ளினிக்ல வேணாம் கார்லே வச்சுக்கலாம்” -குடலை பார்க்க சொன்ன பெண்ணின் உடலை பார்த்த டாக்டர்

 

“க்ளினிக்ல வேணாம் கார்லே வச்சுக்கலாம்” -குடலை பார்க்க சொன்ன பெண்ணின்  உடலை பார்த்த டாக்டர்

சிகிச்சைக்கு வந்த பெண்ணை ஒரு டாக்டரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது ..

“க்ளினிக்ல வேணாம் கார்லே வச்சுக்கலாம்” -குடலை பார்க்க சொன்ன பெண்ணின்  உடலை பார்த்த டாக்டர்

உத்தரபிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு டாக்டர் குடல் சிகிச்சையில் நிபுணர் ஆவார் .அவரிடம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள மோடி நகரில் ஆதர்ஷ் காலனியில்  வசிக்கும் 30 வயதான பெண் தன்னுடைய குடல் சிகிச்சைக்கு வருவதற்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார் .அதற்கு அந்த டாக்டர் அந்த பெண்ணை  க்ளினிக்கிற்கு வரசொல்லாமல் அவரின் காரில் இருக்க சொன்னார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் அந்த டாக்டரின் காரில் காத்திருந்தார் .

அதன் பிறகு அந்த டாக்டரும்  அவரின் சில நண்பர்களும் அந்த பெண்ணை அவர்களின் காரில் ஒரு இடத்தில்  சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார்கள் .அப்போது அவர்கள் காரில் செல்லும்போதே அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்கள் .இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று அந்த டாக்டர் மற்றும் அவரின் நணபர்கள் மீது புகாரளித்தார் .அப்போது அவரின் புகாரில் ,தான் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய தன்னுடைய நான்கு வயது மகனோடு அந்த டாக்ட்டரை  தேடி சென்ற போது, அந்த டாகடர் தன்னை காரில் காத்திருக்க சொன்னதாகவும் ,பின்னர் அவருக்கு மயக்க மருந்து கலந்த குளிர் பானம் கொடுத்து மயக்கமுற செய்ததாகவும் ,அதன் பிறகு அவரின் நண்பர்களுடன்  சேர்நது  பலாத்காரம் செய்ததாகவும் ,இந்த விஷயத்தை போலீசில் கூறினால்  மோசமான விளைவுகள் ஏற்படுமென்று  மிரட்டினார் என்று அவர் புகார் கூறினார் .பின்னர் போலீசார் அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் அந்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“க்ளினிக்ல வேணாம் கார்லே வச்சுக்கலாம்” -குடலை பார்க்க சொன்ன பெண்ணின்  உடலை பார்த்த டாக்டர்