“இன்ஸ்டாகிராமில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி”-ஐந்து இளைஞர்கள் செய்த கடத்தல் வேலை ..

 

“இன்ஸ்டாகிராமில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி”-ஐந்து இளைஞர்கள் செய்த கடத்தல் வேலை ..

சமூக ஊடகத்தில் நட்பாக பழகிய ஒரு வாலிபரிடம் சிக்கி சீரழிந்த ஒரு 13 வயது சிறுமியின் கதையை கேட்டால் கண்கள் குளமாகும் .
மத்தியபிரதேச மாநிலம் அக்ரிப்படாவில் வசிக்கும் ஒரு 13 வயது சிறுமி விடுமுறைக்கு தன்னுடைய அத்தை வீட்டிற்கு வந்திருந்தார் .அப்போது அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு நண்பரிடம் நன்றாக, நட்பாக பழகியுள்ளார் .அதை தவறாக எடுத்துக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணுக்கு தவறான எண்ணத்தில் வலை வீசியுள்ளார் .

“இன்ஸ்டாகிராமில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி”-ஐந்து இளைஞர்கள் செய்த கடத்தல் வேலை ..
இதனால் ஜூன் 1ம் தேதியன்று அந்த சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு டின்னருக்கு அழைத்துள்ளார் .அவரும் அவரின் பேச்சை நம்பி டின்னருக்கு வந்துள்ளார் .அப்போது அங்கு காத்திருந்த அந்த 22 வயது வாலிபரும் .மற்றும் இன்னும் நான்கு நண்பர்களும் அந்த சிறுமியை ஒரு காரில் வைத்து கடத்தி சென்று விட்டனர் பிறகு அந்த வாலிபர் அந்த சிறுமியை ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று , அங்கு ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .

“இன்ஸ்டாகிராமில் பழகி ,கெடுக்கப்பட்ட அழகி”-ஐந்து இளைஞர்கள் செய்த கடத்தல் வேலை ..
அந்த பெண்ணை இரவு முழுவதும் காணாத அவரின் அத்தை அருகேயுள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார் .போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ,அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஆராய்ந்து அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் சென்றனர் .அங்கு அந்த பெண்ணையும் அந்த வாலிபரையும் மீட்ட போலீசார் மற்ற நான்கு பேரையும் மத்தியப்பிரதேசத்தில் கைது செய்தனர் .பெண்ணை கடத்திய ஐந்து பேரும் சிறையிலடைக்கப்பட்டனர் .