“தடுப்பூசி போட்டுக்கோ… சரக்க வாங்கிக்கோ” – ஜோ பைடனின் அசத்தல் அறிவிப்பு!

 

“தடுப்பூசி போட்டுக்கோ… சரக்க வாங்கிக்கோ” – ஜோ பைடனின் அசத்தல் அறிவிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. தற்போது ஓரளவு குறைந்திருக்கிறது. இன்னொரு லாக்டவுன் போட்டால் பொருளாதாரம் கடுமையாக் அடிவாங்கும் என்பதால் தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்று உலகின் பல நாடுகள் தீர்மானமாக உள்ளன. சீனா, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளிலுள்ள அரசுகளும் தனியார் நிறுவனங்களும் மக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ரகரகமாக பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகின்றன.

“தடுப்பூசி போட்டுக்கோ… சரக்க வாங்கிக்கோ” – ஜோ பைடனின் அசத்தல் அறிவிப்பு!

உணவகங்களில் இலவச உணவு, மதுபானக் கடைகளில் இலவசமாக பீர், ஒயின் போன்ற மதுபானங்கள் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஒருசில நாடுகளில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பார்களில் கஞ்சா இலவசமாக கொடுக்கப்படுகிறதாம். சீனாவில் தொற்று வீரியமாக இருக்கும் முக்கிய நகரங்களில் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் குழந்தைகளின் கல்வி, சொந்தமான வீடுகளைப் பறித்துவிடுவோம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

“தடுப்பூசி போட்டுக்கோ… சரக்க வாங்கிக்கோ” – ஜோ பைடனின் அசத்தல் அறிவிப்பு!

இச்சூழலில் அமெரிக்க மக்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அந்நாடு சுதந்திரமடைந்த ஜூலை 4ஆம் தேதிக்குள் 70 சதவீத மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றிருக்கிறார். அப்போது பேசிய அவர், “ஜூலை 4ஆம் தேதி நமது நாடு சுதந்திரம் அடைந்த தினம். அன்றைய தினம் நமது நாட்டிலிருந்து கொரோனாவை விரட்டி நாம் சுதந்திரம் அடைய வேண்டும். அதற்கு ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது தான். நாங்கள் மக்களிடம் ஒரேயொரு உதவி தான் கேட்கிறோம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். புதிய வருடத்தில் நமது வாழ்வைப் பீடித்திருக்கும் கொரோனாவை விடுவிப்போம்.

“தடுப்பூசி போட்டுக்கோ… சரக்க வாங்கிக்கோ” – ஜோ பைடனின் அசத்தல் அறிவிப்பு!

சுதந்திர தினத்துக்குள் நாட்டு மக்களில் 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக வைத்துள்ளோம். தற்போது வரை 63 சதவீத மக்களுக்கு செலுத்தியுள்ளோம். 12 மாகாணங்கள் 70 சதவீதம் பேருக்கு செலுத்தியிருக்கின்றன. 6 லட்சம் மக்களை கொரோனா கொன்று குவித்தது. இப்போது இறப்பு விகிதம் 85 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. இதெல்லாம் தடுப்பூசியால் நிகழ்ந்த மாற்றங்கள். ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். ஒரு கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு இன்னொரு கையில் பீரை எடுத்து சுவையுங்கள். நாம் விரைவில் விடுதலை பெறுவோம்” என்றார்.