டாஸ்மாக் ஊழியர்களுக்கான மாஸ்க், சானிடைசரை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்!
Aug 14, 2020, 21:22 IST1597420357000
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் , சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் டாஸ்மாக் கடைகள் திறந்து விற்பனை செய்யபட்டு வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் சென்னை வடக்கு மாவட்ட கடை மேற்பார்வையாளர்கள் அனைவரும் கடை ஊழியர்கள் அனைவருக்கும் தேவையான (covid 19) mask,sanitizer, cloves,tablet,price list ஆகியவற்றை அலுவலகத்தில் வந்து நாளை (15.08.2020) பெற்றுச் செல்லுமாறு சென்னை வடக்கு மாவட்ட மேலாளர் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.