மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!
Sep 26, 2020, 09:10 IST1601091603000
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினருடனும் தலைமைச் செயலாளர் சண்முகம்இன்று ஆலோசனை நடத்துகிறார். அதேபோல் கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன் ரயில்வே, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 5,679 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.