மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்!

 

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்!

இந்நிலையில் சி.கே. குமரவேல் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணை தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்மப்ரியா, முருகானந்தம் என முக்கிய நிர்வாகிகள் பலர் விலகி உள்ளனர்.

இது குறித்து குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019 மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிபோனாலும் தமிழகத்தில் உங்களால் மக்கள் நீதி மய்யத்தில் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் மீண்டும் இணைந்து மக்களிடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்!

கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் கட்சி நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தை மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும் நம்பிக்கையும் அதிகரித்ததே நான் கண்கூடாக பார்க்க முடிந்தது. அதைத் தொடர்ந்து டார்ச்லைட் சின்னம் கிடைத்தபோதும் ரஜினிகாந்த் , அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த போதும் மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.

ஆனால் இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமர வேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்தபோதும் ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெற முடியவில்லையே ஏன்? உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவருடைய தவறான வழி காட்டுதலும் தான் காரணம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றால் போதும் என்கின்ற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான் மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் விலகல்!

நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்களும் , ஊடகங்களும் முன் வைத்து விட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள் புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரலாறு படைத்தவர்களாக இருக்க வேண்டிய நாம் வரலாறு படிப்பவர்கள் ஆக மாறி விட்டோம் என்கிற கோபமும் ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியல் விடவும் மதசார்பற்ற ஜனநாயக அரசியல் பாதையில் பயணிக்க விரும்புகிறேன். மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து உடனடியாக விலகுகிறேன்” என்று கூறியுள்ளார்.