இதுவரை 5… ஆறாவதாக ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பேன் என்று அமித் ஷா சொன்னதாக அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டு

 

இதுவரை 5… ஆறாவதாக ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பேன் என்று அமித் ஷா சொன்னதாக அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டு

இதுவரை 5 அரசுகளை கவிழ்த்துள்ளேன், ஆறாவதாக ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பேன் என்று ராஜஸ்தான் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களிடம் அமித் ஷா கூறியதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் சிரோஹியில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில் கூறியதாவது: தொற்றுநோய் பரவல் காலத்தில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க முயற்சிகள் நடந்தன. பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மாநிலங்களவை எம்.பி. சையத் ஜாபர் இஸ்லாம் ஆகியோருடன் சென்று நமது எம்.எல்.ஏ.க்கள் அமித் ஷாவை சந்தித்தனர்.

இதுவரை 5… ஆறாவதாக ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பேன் என்று அமித் ஷா சொன்னதாக அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டு
காங்கிரஸ்

அந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நமது எம்.எல்.ஏ.க்களிடம் இதுவரை நான் 5 அரசுகளை கவிழ்த்துள்ளேன் விரைவில் ஆறாவது அரசை கவிழ்க்க போகிறேன் என்று தெரிவித்தார். ஒரு காலத்தில் சர்தார் படேல் வகித்த உள்துறை அமைச்சர் பதவியை அமித் ஷா போன்றவர்கள் ஆக்கிரமித்து வருவதை கண்டு தாங்கள் வெட்கப்படுவதாக அந்த எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் சொன்னார்கள்.

இதுவரை 5… ஆறாவதாக ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பேன் என்று அமித் ஷா சொன்னதாக அசோக் கெலாட் பகீர் குற்றச்சாட்டு
முதல்வர் அசோக் கெலாட்

ஒட்டு மொத்தமாக நான்கு மாநில அரசாங்கங்களை கவிழ்த்ததில் அனுபவம் பெற்றவர்கள் என்றும், ஜந்தாவது மாநிலத்திலும் அவர்கள் அரசாங்கத்தை கவிழ்ப்பார்கள் என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது. மூத்த தலைவர்களான அஜய் மாக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா, கே.சி. வேணுகோபால் மற்றும் அவினாஷ் பாண்டே ஆகியோர் இங்கு வந்து எங்கள் சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களை இடைநீக்கம் செய்வதற்கான அவர்களின் முடிவுகள் எங்கள் அரசாங்கத்தை காப்பாற்ற உதவியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.