15 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம்.. கெஜ்ரிவால் அரசு விளம்பரங்களில்தான் கவனம் செலுத்துகிறது… கவுதம் காம்பீர்

 

15 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம்.. கெஜ்ரிவால் அரசு விளம்பரங்களில்தான் கவனம் செலுத்துகிறது… கவுதம் காம்பீர்

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு விளம்பரங்களில்தான் கவனம் செலுத்துகிறது என குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: டெல்லி முதல்வர் காகிதத்தில்தான் ஒன்றாக பணிபுரிவோம் என சொல்கிறார். ஆனால் உண்மையில் அவர் அரசியல் செய்கிறார்.

15 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம்.. கெஜ்ரிவால் அரசு விளம்பரங்களில்தான் கவனம் செலுத்துகிறது… கவுதம் காம்பீர்

காந்தி நகர் பகுதியில் தனிமைப்படுத்தும் மையம் கட்டி ஒன்றரை மாதங்கள் ஆகி விட்டது. இருப்பினும் அதனை எந்த மருத்துவமனையுடனும் இணைக்கும் முயற்சிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இணைக்கப்பட்டு இருந்தால் தொற்று நோயாளிகளுக்கு உதவியிருக்கும். அவர் தனது கையில் உள்ளதை செய்து அனுமதிகளை வழங்க வேண்டும். முழு பணமும் டெல்லியர்களுக்காக இருக்கும்போது கூட இப்போது அரசாங்கம் ஏன் விளம்பரங்களில் கவனம் செலுத்துகிறது.

15 நிமிடத்துக்கு ஒரு முறை விளம்பரம்.. கெஜ்ரிவால் அரசு விளம்பரங்களில்தான் கவனம் செலுத்துகிறது… கவுதம் காம்பீர்
ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு பிளாஸ்மா நன்கொடை குறித்த விளம்பரங்களை காட்டுகிறது. டெல்லி அரசிடம் தரவு உள்ளது. அரசு தனித்தனியாக அவர்களை தொடர்பு கொண்டு பிளாஸ்மாவை நன்கொடை செய்யக் கோரலாம். டெல்லியில் நீர் தேக்கம் பற்றி விவாதிக்கப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டுக் குழுவின் கூட்டத்திலிருந்து இப்போதுதான் திரும்பி வந்தேன். பொதுப்பணித்துறையிலிருந்து யாரும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதுதான் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அந்த ஏஜென்சியின் தீவிர நிலை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.